இலங்கைத் தேசியகாங்கிரசில் தமிழருக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளுடன் 1921 இல் அந்த அமைப்பை விட்டு வெளியேறினார் சேர்.பொன்.அருணாசலம். 1923 இல் இலங்கைத் தமிழ் லீக் எனும் அமைப்பைத் தொடங்கிய கையோடு தமிழீழம் பெறுவதே அதனது குறிக்கோள் என கடுமையான பிரச்சாரத்தில் இறங்கினார்.(12)
1923 இல் நடந்த இலங்கைத் தமிழ் லீக் கூட்டத்தில் “தமிழீழம் என்ற நம் குறிக்கோளை அடைய வேண்டுமானால் எம்மிடையே ஒற்றுமையை வளர்ப்பதோடுஇ எமது கொள்கைகளை நாம் என்றும் கடைப்பிடிக்கவேண்டும். எமது பாரம்பரியத்தை நினைவு கூருவதோடு எமது தனித்துவத்தை நாம் பாதுகாக்கவேண்டுமானால் ஒரு பலமுள்ள சமுதாயமாக எம்மை மாற்றிக்கொள்ளவேண்டும்” என சேர்.பொன்.அருணாசலம் முழங்கினார்(13). தமிழர் ஒற்றுமைக்கோஇ தமிழர் பாரம்பரியத்திற்கோஇ தமிழர் தனித்துவத்துக்கோ அன்றைய நிலையில் (1920 களில்) சிங்களவர்களால் எந்தவித ஊறும் விளைவிக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக ஆங்கில மமதையில் ஆட்சி அதிகார பீடமாக உயர்ந்திருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்தத் தலைமைகளே தமிழ்மக்களின் ஒற்றுமை குறித்து அக்கறைப்படாது இருந்தவர்கள். சொந்தமக்களின் உரிமைகளை மறுத்து சிங்கள அதிகார பீடத்துடன் அதிகாரத்தை பங்கிட்டுக்கொண்டிருந்தவர்கள். தமிழர் பாரம்பரியத்தைகுழிதோண்டிப்புதைத்து தாய்மொழியை ஈனமொழியாக்கியவர்கள். அப்படியிருக்க அவர்களே இவற்றுக்காக அழுவது என்பது ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவதற்கு ஒப்பாய் இருந்தது.
ஆகவே எந்தவொரு பாரிய அச்சுறுத்தலையும் தமிழ் சமூகம் எதிர்கொள்ளாத வேளையில் வெறும் யாழ்ப்பாணத்து மேல்தட்டினரின் நலங்களுக்கு பலம் சேர்ப்பதற்காகவே இந்த தமிழீழ கோரிக்கை 1923 இல் இருந்தே போலியானதாக எழுப்பப்பட்டிருக்கிறது. இந்த எவ்விதத்திலும் அர்த்தபுஷ்டியற்ற ஒரு போலிப் பிரச்சாரத்தினூடு கிழக்கு மக்களையும் உள்வாங்கி ‘வாக்கு பொறுக்கி’ அரசியல் நடத்துவதற்காகவே இந்த தமிழீழத்தை முன்வைத்தனர் என்பதை இனியாவது தமிழர்களாகிய நாமும் கிழக்கு சமூகங்களும் புரிந்துகொள்ள வேண்டும். வெற்று இனவாதக் கூச்சலாகவும், விசமத்தனமானதொன்றாகவும் உருவாக்கப்பட்ட ஒரு நச்சுப்பிரச்சாரமே இந்த தமிழீழம் என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல.
1944 ஆண்டு கொண்டுவரப்பட்ட இலவசக் கல்வித்திட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் எதிர்ப்பதில் ஜீ.ஜீ.பொன்னம்பலம்இ மகாதேவாஇ சிறிபத்மநாதன் என்கின்ற தமிழ் பெரும் தலைவர்கள் ஒற்றுமையாக நின்று எதிர்த்தனர். மத்தியதர வர்க்கம் நிறைந்த யாழ்ப்பாணத்தைத் தவிர கிழக்கிலங்கை மக்களும்இ தென்னிலங்கை மக்களும் கல்வியறிவு பெறக்கூடாது என்பதில் இந்த யாழ்ப்பாணத் தலைமைகள் மிகக் கவனமாக செயற்பட்டனர். பாமர மக்களுக்கு அறிவுப் பொக்கிசத்தைத் திறந்துவிட முனைந்த சிங்கள அரசியல்வாதியான டபிள்யு.டபிள்யு.கன்னங்கரா போன்றவர்களுடன் ஒப்பிடுகையில் நமது தலைமைகளே துரோகங்களின் பிறப்பிடமாய் இருந்திருக்கிறார்கள்.கல்வியில் பின்தங்கியிருந்த கிழக்கிலங்கை தென்னிலங்கைப் பிரதேசங்களுக்கு அவ்வாய்ப்புகள் கிடைக்காது தடுக்க முயன்ற யாழ்ப்பாணத் தலைமைகளின் வஞ்சகத் தன்மையை நாம் புரிந்துகொள்ள வரலாறுகள் இதுவரை வாய்ப்பளிக்கவில்லை.
ஐக்கியதேசியக் கட்சி அரசாங்கத்தில் அவ்வேளையில் அமைச்சராய் இருந்த அருணாசலம் மகாதேவா என்பவரை தமிழினத் துரோகி என்றும் தமிழ் பேசும் மக்களின் மீட்பர் தான் மட்டுமே என்றும் திரும்பத் திரும்ப பேசி 1947 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ஜீ.ஜீ.. ஆனால் அந்த தேர்தலில் வெற்றிபெற்ற கையோடு டி.எஸ்.சேனநாயக்காவின் இரு அமைச்சு பதவிகளுக்காக ஐக்கியதேசியக் கட்சி ஆட்சியில் பொன்னம்பலமும் பங்கெடுத்தார்.
15-நவம்பர்-1948 அன்று பாராளுமன்றத்தில் யு.என்.பி. அரசு கொண்டுவந்த பிரஜாவுரிமைச் சட்த்தின்மீது தமிழ்காங்கிரஸின் பொன்னம்பலம் தலைமை ஆதரவைத் தெரிவித்தது. இதன்மூலம் 10 இலட்சம் தோட்டத்தொழிலாளர்களின் வாக்குரிமையை ஒரேநாளில் பறித்த யு.என்.பி முதலாளித்துவ அரசினது அநாகரிக செயலுக்கு பொன்னம்பலம் உடந்தையாயிருந்தார்.
இந்த செயற்பாட்டின்மீதும் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையிலான ஒரு குழுவினர் தமிழ்காங்கிரசின் தலைமைமீது முரண்பட்டனர். இந்த முரண்பாடுகளின் தொடர்ச்சியாகவே இலங்கை தமிழ்காங்கிரசில் இருந்து செல்வநாயகம் வெளியேறி “தமிழரசுக்கட்சி” என்கின்ற ஒரு அரசியல் கட்சியைத் தோற்றுவித்தார்.
“தமிழ்த் தேசியம்” என்கின்ற ஒன்று நோக்கி முஸ்லிம்இ மலையகஇ கிழக்குவாழ் தமிழர்களை அணிதிரட்டும் பணியில் அவர் ஈடுபட்டார். மதஇ பிரதேச எல்லைகளைத் தாண்டிய தமிழ்பேசும் மக்களுக்கான ஒருமித்த “ஆன்மா” ஒன்றினை கட்டியமைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார் என இதனைக் கொள்ளலாம். பரந்துபட்ட தமிழ் பேசும் மக்களுக்கான சமஸ்டிக் கோட்பாடுகளுடனும் மலையக மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான கோரிக்கைகளுடனும் மக்களைச் சந்தித்த தமிழரசுக்கட்சி 1952 ஆம் ஆண்டுத் தேர்தலில் கடுமையானதொரு தோல்விக்கு முகம்கொடுக்க நேரிட்டது.
1949 இல் ஆரம்பிக்கப்பட்ட தமிழரசுக் கட்சி தான் முதன்முதலாக எதிர்கொண்ட தேர்தலில் மட்டக்களப்பினது கல்லோயக் குடியேற்றத்திட்டத்தையும்இ திருகோணமலை கந்தளாய்க் குடியேற்றத்திட்டத்தையும் கடுமையாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்தனர். திட்மிட்ட சிங்களக் குடியேற்றத்தினால் தமிழ் மக்களது பாரம்பரிய தாயகம் பறிபோவதாக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் இந்தப் பிரச்சாரங்களின் பின்னணியில் உண்மையிலேயே தேர்தலை நோக்கிய அணிதிரட்டலே மேற்கொள்ளப்பட்டது என்பதே உண்மையாகும். 1941 ஆம் ஆண்டு டி.எஸ்.சேனநாயக்காவினால் முன்னெடுக்கப்பட்ட இந்தக் குடியேற்றத்திட்டத்தில் சிங்களவருக்கென்று விசேடமான சலுகைகள் எதுவுமே அளிக்கப்பட்டிருக்கவில்லை. காணிக்கச்சேரிகளில் பொதுக்கூட்டங்கள் நடாத்தப்பட்டு கல்லோயா குடியேற்றத்திட்டத்தில் குடியேற விரும்புவர்களது பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. மட்டக்களப்பு தமிழர்களில் யாருமே அங்கு போய்க் குடியேறுவதை விரும்பவில்லை. ஏனெனில் சுமார் 10000 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பையுடைய கிழக்கு மாகாணத்தில் அவ்வேளை இரண்டு லட்சத்துக்கும் குறைவானோரே வசித்து வந்தனர். நிலத்துக்கு பஞ்சமற்ற கிழக்கு மாகாண மக்கள் கல்லோயாவில் போய்க் குடியேறுவதற்கும் கரும்புத் தோட்டத்தில் வேளை செய்வதற்கும் எவ்வித அவசியமும் இருக்கவில்லை. இந்தநிலையில் கல்லோயாவை சிங்களவர் வந்து குடியேறுவதையிட்டு மட்டக்களப்புத் தமிழர்களோ முஸ்லிம்களோ பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. இதன்பின்னரே சிங்களவருக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட குடியேற்றத்திட்டத்தில் உருவாக்கப்பட்ட 44 கிராமங்களில் ஆறு கிராமங்களில் மட்டுமே தமிழர்கள் குடியேற விண்ணப்பித்திருந்தனர். இதன் காரணமாகவே எஞ்சிய 38 கிராமங்களும் சிங்களவருக்கு வளங்கப்பட்டது. ஆனால் இந்த உண்மைகள் எமது வரலாறுகளில் மறைக்கப்பட்டிருக்கின்றன. நீர்வளம் குறைவாக இருந்த பல ஏக்கர் கணக்கான நெற்காணிகள் இந்த குடியேற்றத்திட்டத்தின் காரணமாக பசுமைமிகு தரைகளாக மாறின. இந்த நிர்வளங்களல் கால்வாய்த் திட்டங்களினால் குடியேற்றத்திட்டங்களில் அண்டிவாழ்ந்த தமிழர்களது நெற்காணிகளும் நீhப்பாசன வசதி பெற்றன. இந்த உண்மை நிலைகளை கவனத்தில் கொள்ளாமல் தமிழ்இ தமிழன்இ தமிழ் பிரதேசம் என்று இனவெறியைக் கிளறுகின்ற நடவடிக்கைகளையே யாழ்ப்பாணத் தலைமைகள் செய்தன.
இதேபோன்றே திருகோணமலையில் இடம்பெற்ற கந்தளாய்க் குடியேற்றத்திட்டத்தையும் தமக்கு வாய்ப்பாக திரித்து தமிழரசுக் கட்சியினர் அரசியலாக்கினர்.
to be continued..



9:14 PM
Jana Master
0 கருத்துரைகள்:
Post a Comment