Sunday, August 22, 2010

தில்லாலங்கடி - விமர்சனம்



கிக் இல்லேன்னா வாழ்கையில சுவாரஸ்யமே இல்லைங்கிற ஒருத்தனோட லவ்வை 'கிக்'க்கிக்கேன்னு சிரிக்கிற மாதிரி சொல்லியிருக்கார் டைரக்டர் ராஜா.

'சிரிப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்' ங்கிற அவரது பாலிசிக்கு தியேட்டரில் கிடைப்பது ஏராளமான கைத்தட்டல்களும், கொஞ்சூண்டு கொட்டாவியும்! ஒரு அரை மணி நேர படத்தை நறுக்கிப் போட்டால் அந்த கொட்டாவிக்கும் ஒரு கோணிப்பையை ரெடி பண்ணியிருக்கலாம். (ஹ்ம்ம்ம்ம்ம் முன்னாடியே யோசிச்சிருக்கணும்)

நண்பனின் திருட்டு கல்யாணத்தில் சந்திக்கும் தமன்னா மீது லவ்வாகிறார் ரவி. "லவ்வை உடனே சொல்லிடாதே, எனக்கு கிக் வேணும். நல்லா அலைய வச்சு சொல்லு" என்கிற அவரது முதல் வேண்டுகோளே பைத்தியமாக்கி அலைய விடுகிறது தமன்னாவை. (எதற்கெடுத்தாலும் அவர் உச்சரிக்கும் ங்கொய்யால...வுக்கு உசுரையே கொடுக்குறான் ரசிகன்!) அடிக்கடி பொய் சொல்லும் ரவியை இனிமேல் சந்திக்கவே கூடாது என்று முடிவெடுக்கிற தமன்னா, ஷாமை கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார். சும்மா போகாமல் அவரது அருமை பெருமையை எடுத்துவிட, 'இன்ட்ரஸ்ட்டிங். எனக்கும் ஒருத்தன் குடைச்சல் கொடுக்கிறான்' என்கிறார் போலீஸ் அதிகாரியான அவர். ஷாம் சொல்லும் அந்த நபர் ஜெயம் ரவிதான் என்பதும், போலீஸ் அதிகாரிகளும், கவர்மென்ட்டும் தேடுவதும் அதே ரவியைதான் என்பதும் பின்பாதி லெக் பீஸ். தலைக்கு மேல அவ்வளவு துயரத்தை வைத்துக் கொண்டு ரவி அடிக்கும் காமெடிக்கு தில்லாலங்கடி ஆகிறது தியேட்டர். முடிவில் 'தமன்னா எங்கப்பா' என்று ஏக்கத்தோடு கேட்டபடியே கலைகிறார்கள் ரசிகர்கள்.

முதல் சீனிலேயே ரவியின் கேரக்டரை முழுசாக உணர வைக்கிறார்கள். "....ஏன்னா எனக்கு இன்னொரு முகம் கிடையாதே" என்று அசட்டு சிரிப்பு சிரிக்கும் அவருக்குள் ஒரு ராபின் ஹ¨ட்டா? வடிவேலு, சந்தானத்துடன் இவர் அடிக்கும் லு£ட்டிக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல தமன்னாவுடன் அடிக்கிற லு£ட்டியும். தமன்னாவுக்குள் காதலை வரவழைத்துவிட்டு கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் பார்ட்டி பிய்த்துக் கொள்வது செம ரவுசு. அதுவும் மலேசியாவில் அவரை சந்தித்த பிறகும், கூலாக தன்னை மெமரி லாஸ் ஆக்கிக் கொள்வதும் சிரிப்போற்சவம். வெள்ளரி பிஞ்சுல பலா முள்ளுக்கு வேலை ஏது? முடிந்தவரை சீரியஸ் காட்சிகளை குறைத்துவிட்டு காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் ரசிகர்கள் சார்பில் டைரக்டரை 'மவராசனா இருக்கணும்...' என்று வாழ்த்துவோமாக!

சிரிக்கிற தமன்னாவை விட கொதிக்கிற தமன்னாவே அதிக இடங்களில் வருவதால் நமக்கும் பிசகிக் கொள்கிறது மனசு. நல்லவேளை, தமன்னாவின் காஸ்ட்யூமர் புண்ணியத்தில் கன்னாபின்னாவென்று ஏறுகிறது கிக். (இது படம் முழுக்க ரவி சொல்கிற 'அந்த' கிக் இல்லீங்...) ரவியை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காக இவர் வடிவேலுவை லவ் பண்ணுவதும், அதை அவர் சீரியசாக எடுத்துக் கொள்வதும் ஜோக் தோரணம். அதாருங்கங்க அந்த தங்கச்சி பாப்பா? காஸ்ட்யூம்ல தமன்னாவையே மிஞ்சுதே!

எல்லா படத்திலேயும் வருகிற அமெரிக்க மாப்பிள்ளை ரேஞ்சுக்கு ஆகிவிடுவாரோ என்ற அச்சத்தை முதலில் ஏற்படுத்தினாலும், ஈக்குவல் ஹீரோவாக்கியிருக்கிறார்கள் ஷாமையும். (நன்றி சொல்லுங்க பாஸ் ராஜாவுக்கு) இவரது கம்பீரமும் நமக்கு புதுசாக இருக்கிறது. கன்ட்டினியூ பண்ணுங்க ராசா...

இதென்ன வறுத்து வச்ச வஞ்சரம் மீனு மாதிரி இருக்கு? என்று சந்தானம் கொடுக்கிற லந்து ஒருபக்கம். அட பிறந்த மேனியா படுத்துருக்கானே என்று வடிவேலு கொடுக்கிற ரகளை மறுபக்கம். பீஸ் பீசாகிவிடுகிறது தியேட்டர். தமன்னா மீது காதல் கொண்டு திரியும் வடிவேலு, பின்பு அதெல்லாம் டுபாக்கூர் என்று உணர்ந்து வருந்துவதும் தனி தபேலா! இன்னொரு ஆச்சர்யம். பல படங்களில் நொறுங்க நொறுங்க வெறுப்பேற்றிய மன்சூரலிகான் இந்த படத்தில் காமெடி பண்ணியிருக்கிறார். அட சிரிக்கிறோம்ல!

பிரபு வெயிட்டை பார்த்தாவது கொஞ்சம் வெயிட்டான ரோல் கொடுத்திருக்கலாம். ஓரத்துல வச்ச ஊறுகாயா இருந்தாலும் சுர்ருன்னுதான் போவுது ராதாரவி போர்ஷன்.

பக்கத்து சீட் ஆசாமி 'இப்படி யார் யாரையோ போட்டு இம்ச பண்ணுறதுக்கு பேசாம யுவன் சங்கர் ராஜாவை போட்டிருக்கலாம்' என்று அலுத்துக் கொண்டதுதான் அதிர்ச்சி. (இசை யுவனேதானாம்!) எடுத்துட்டமே என்று இடைச்செருகிய ஒரு பாடலில் செம துள்ளல். ஆனால் அது பேத்தாஸ் மூட் சீன்?! (ஏன்ங்க?) மலேசியாவுக்கே ஒரு ட்ரிப் அடிச்சுட்டு வந்த அனுபவத்தை தருகிறது பி.ராஜசேகரின் ஒளிப்பதிவு.
தில்லாலங்கடி- கலகலப்பு 'கல்லா'லங்கடி!

நன்றி-விடுப்பு

இதெல்லாம் ஒரு ஊடகம்.

ஊடகங்கள் பக்கச் சார்பின்றி செயற்பட வேண்டும் ஆனால் சில ஊடகங்கள் தாங்கள் சுய இலாபம் தேடுவதற்காக சமூகங்களுக்கிடையே பிரிவினையினை ஏற்படுத்தி வருவதோடு தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ள எதனையும் செய்யத் துணியும் சில அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு துணைபோகும் பல ஊடகங்கள் இருக்கின்றன.

அண்மையிலே மட்டக்களப்பு ஆரையம்பதியிலே இடம்பெற்ற ஒரு நிகழ்விலே கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் ஆற்றிய உரையினை முற்றிலும் திரிவு படுத்தி தமிழ்வின் இணையத்தளம் செய்தியினை வெளியிட்டிருந்தது.

நான் ஒரு முதலமைச்சராக இன்றி பழைய பிள்ளையானாக மாற வேண்டி வரும்: எச்சரிக்கிறார் கிழக்கு மாகாண முதலமைச்சர் எனும் தலைப்பிலே எழுதப்பட்டிருக்கும் அச் செய்தியில். 18.08.2010ம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி மட்டக்களப்பு ஆரையம்பதியிலுள்ள ஆரையம்பதி சமூக அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் முதலமைச்சரை வரவேற்று வாழ்த்துவதற்காக ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. என்றும் அங்கே மகஜர் ஒன்று முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டதாகவும். முதலமைச்சர் பேசும்போது “முஸ்லிம் மக்களுக்கான மாதிரிக் கிராமம் அமைக்கப்படுவதை யாராலும்
தடுக்க முடியாது. இதையும் மீறி தடுக்கும் முயற்சியில் யாராவது தமிழர்கள் ஈடுபட்டால் அதை எதிர்கொள்வதற்கு நான் ஒரு முதலமைச்சராக இன்றி பழைய பிள்ளையானாக மாற வேண்டி வரும்” என உரத்த குரலில் எச்சரிக்கை விடுத்தார். என்றும் குறிப்பிடப் பட்டிருக்கின்றது.

இது முற்றிலும் தவறான ஒரு செய்தியாகும் இந்த நிகழ்வுகளிலே நானும் கலந்து கொண்டேன்.

உண்மையில் நடந்தவை என்ன...


18.08.2010ம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி பிறந்தநாள் நிகழ்வும் முதலமைச்சரின் இரண்டு வருட அபிவிருத்திப் பணிகளின் தொகுப்பு இறுவட்டு வெளியீடும் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்திலே இடம்பெற்றது.

பிறந்தநாள் நிகழ்வு ஆரையம்பதியில் இடம்பெறவில்லை. மட்டக்களப்பு ஆரையம்பதியிலுள்ள ஆரையம்பதி சமூக அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில்
எந்த ஒரு நிகழ்வும் ஆரையம்பதியில் இடம்பெறவில்லை.



ஆரையம்பதியிலே முதலமைச்சரின் பிறந்த தினத்தன்று நெக்டெப் திட்டத்தின் மூலம் இரண்டு கோடி செலவில் இளைஞர் வள நிலையம் முதலமைச்சரினால்
திறந்து வைக்கப்பட்டது. இங்கே பிறந்தநாள் நிகழ்வு இடம்பெறவில்லை. இத்திறப்பு விழாவினை ஆரையம்பதி பிரதேச செயலகத்தினர் ஏற்பாடு செய்திருந்ததோடு பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம் அவர்களின் தலைமையிலேதான் நிகழ்வு இடம்பெற்றது.


அந்த நிகழ்வில் முதலமைச்சர் உரையாற்றும்போது. காங்கேயனோடையில் அமைக்கப்பட இருக்கின்ற மாதிரிக் கிராமம் தொடர்பாக தான் இப்போது
ஒரு முடிவெடுக்க முடியாது எனவும் தான் ஒரு முதலமைச்சராக இருந்து பக்கச் சார்பான முறையிலே முடிவெடுக்க முடியாது. இரு இனத்தவரினுடைய உரிமை கௌரவம் என்பவற்றுக்கு மதிப்பளித்து தான் செயற்பட வேண்டும் என்றும் இந்த மாதிரிக் கிராமம் அமைக்கப்படும் பிரதேசம் தங்களுடையது என்று தமிழர்களும்
முஸ்லிம்களும் உரிமை கோரி வரும் நிலையில் இதன் உண்மை நிலையினை அறிய தான் ஒரு குழுவினை அமைத்து ஆராய்ந்து வருவதாகவும் கூறினார்.

மேலும் இப்பிரச்சினையை ஒரு சில அரசியல்வாதிகள் இரு சமுகங்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்தி தமது இருப்பினை தக்க வைத்து
அரசியல் ஆதாயம் தேட முற்படுகின்றனர். அதேபோல் சில அதிகாரிகளும் தமது ஊழலை மூடி மறைப்பதற்காக இரு சமூகங்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்க நினைக்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

ஊடகங்கள் சமூகங்களுக்கிடையே பிரச்சினைகளை ஏற்படுத்தும் பொய்யான செய்திகளை தவிர்க்க வேண்டும். இவ்வாறான பல பொய்யான பிரச்சாரங்கள் மூலம் எமது தமிழ் சமூகம் பல அவலங்களை சந்தித்திருக்கின்றது. இது போன்ற பொய்யாய செய்திகள் மூலம் இரு சமூகங்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்க நினைப்பதை ஊடகங்களும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நன்றி - சந்ரு

Friday, August 6, 2010

உஞ்சு.

உஞ்சு இது வேறை ஒண்டுமில்லை எங்கட நாயைக்கூப்பிடுறபேர். எப்படி இந்தப்பெயர் வந்தது என்று எனக்குத்தெரியாது. எங்கட வீட்டில இருந்த எல்லா நாய்களையும் அப்படித்தான் கூப்பிட்டோம். எங்கட முதல் உஞ்சு ஒரு கறுப்பு வெள்ளையும் கலந்த நாய். அமைதியான நாய். நான் அது குரைத்ததை அதிகம் பார்த்ததே கிடையாது. ஆனால் வளவுக்கை யாரும் வந்த அமைதியாப்போய் கடித்து வைக்கும். அதிகமா தேங்காய் பிடுங்க வாறவனைத்தான் அது கடித்து வைக்கும். அதை எங்கட தாத்தா எங்கையோ இருந்து பிடித்து வந்ததா அம்மா சொல்லுவா. தாத்தா இறந்த போது அந்த நாய் ஊளையிட்டு அழுததை நான் பார்த்திருக்கிறன். எண்பத்தி மூன்று கலவரத்தில ஆமி ரோட்டால போறவாற ஆக்களையெல்லாம் சுட்டபோது இது அவங்களைப்பாத்து பேய்தனமா குரைக்கும். அவங்கள் கோவத்தில கேட்டை காலால உதைச்சுட்டு போயிருக்கிறாங்கள்.

அப்ப பயத்தில ஏனடா இந்த நாயை வளர்கிறம் என்று இருக்கும். அதற்குப்பிறகு அதற்கும் வயசாகிபோச்சு. ஒரு கட்டத்தில கண் தெரியாம போச்சு. ஒருநாள் இரவு எங்கட கிணத்தில விழுந்திட்டுது. பிறகு கறன்ட் இல்லாத நேரத்திலயும் விளக்கு வெளிச்சத்தில் வாளியைக்கட்டி அதை ஒரு மாதிரி அப்பா வெளிய எடுத்தார். அதற்க்குப்பிறகு அது கனகாலம் இருக்க இல்லை. காணாப்போட்டுது. அம்மா சொல்லுவா அது எங்கடவீட்டில செத்து எங்களுக்கு கஸ்டம் குடுக்கக்கூடாது என்று எங்கையோ போய் செத்துவிட்டதென்று. அதுக்குபிறகு நாய் இல்லாம கொஞ்சநாள் இருந்தம்.பிறகு மாமா மீன்வாங்கப்போன இடத்தல ஒரு மண்ணிற நாய்க்குட்டி பிடிச்சு வந்தார். அது ஒரு பேய்பிடித்த நாய்.இரவில எப்ப பாத்தாலும் வெற்றிடத்தைப்பாhத்து குலைத்துக்கொண்டே இருக்கும். இரவில அதோட கரைச்சல்
தாங்க முடியேல்லை என்று அம்மா மாமாக்கு பேசுவா.

உண்மைதான் அப்ப எங்கட வீட்டைச் சுத்தி சுவரோ யன்னலோ இல்லை. அறைகள் மட்டுந்தான் அறுக்கையா இருக்கும் .விறாந்தையில தான்; நாங்கள் படுத்திருப்பம்.
இந்த நாய் இரவில கேற்றில இருந்து குரைச்சுக்கொண்டு ஓடிவரும் பிறகு தாத்தாவின்ர மரக்கட்டில்ல பாஞ்சு ஏறிநின்று வயிரவர்கோயில் திசையில குரைக்கும். அம்மா சொல்லுவா வயிரவர் உலாவுறார் அதுதான் நாய் குரைக்கிறதென்று. இதால நான் ஒன்டுக்குபோகக்கூட வீட்டுப்படியிங்க பயந்திருக்கிறன். அப்படிப்போனாலும் நாய் குரைக்கிற பக்கம் பாக்காம ஒடி வந்து வீட்டுக்கை ஏறிடுவன்.ஒரு நாள் நாய் பிடிக்கிறவங்கள் வந்தாங்கள். முதலே தெரிஞ்சதால எங்கட நாயை உள்ளை விட்டு கேட்டை பூட்டிட்டு நாங்கள் கேட்டில ஏறி விடுப்புப்பாத்துக்கொண்டு இருந்தம். கேற்றுக்கு அடில இருந்த ஓட்டைக்குள்ளால
வெளியபோன எங்கட நாய் அவனைப்பார்த்து வீரங்காட்டி குரைக்க அவன் சுருக்கைப்போட்டு பிச்சு வண்டிலுக்கை போட்டுட்டான். பிறகு நான் ஓடிப்போய் அப்பாவைக்கெஞ்சி அப்பா ஒரு ஐந்து ரூவா குடுத்து விடுவிச்சார்.

பிறகு அந்த நாய் வலிப்பு வந்து செத்துப்போயிட்டுது. அந்த நிறம் ராசி இல்லை என்று அம்மா சொன்னா.அதுக்குப்பிறகும் அதே நிறத்தில வந்தது ஒன்றும் நிலைக்க இல்லை.
கனகாலத்துக்குப்பிறகு கறுப்பும் வெள்ளையும் நிறத்தில புதிசா ஒரு நாய்குட்டி அப்பா யாரிட்டையோ வாங்கி வந்தார். அதுதான் எங்கட கடைசி உஞ்சு. அது வளர்ந்து ரோட்டில யாரையும் போக விடாது. டுட்டரிக்கு போற பெடியங்கள் எல்லாம் காலதூக்கிகொண்டுதான் சைக்கிள்ள போவாங்கள். எப்படியாவது றோட்டுக்குப்போயிடுற அதை துரத்திப்பிடிச்சு உள்ள விடுறது ஒரு நாளைக்கு இரண்டு மூன்டுதரம் நடக்கும். வீட்டுக்கு வாறவையை
நாயிட்டையிருந்து காப்பாத்த அதை பிடிச்சு அமத்தி வைச்சிருக்கிறதும் அது நாங்கள் விடுப்புபார்க்க ஓடிப்போய் கடிக்கபோறதும் சாதாரணம். இந்தியன் ஆமி காலத்திலயும் அது மோப்பம் பிடிச்சு ஆமி காம்பிலயிருந்து நடக்க வெளிக்கிடவே குரைக்க ஆரம்பிச்சிடும். கடைசியா நாங்கள் இந்தியாக்கு வெளிக்கிடேக்கை அதுக்கு விளங்கியிருக்காது. ஏதோ இடம்
பெயர்ந்துதான் போகினம் அடிக்கடி வந்து சாப்பாடு வைப்பினம் என்டு நினைச்சு ஏமாந்துதான் போயிருக்கும

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes