Monday, February 14, 2011

உயிரின் ஆணி வேரைத் தொடும் அற்புதமான ஆனந்தம் காதல்!


அன்பின் பிணைப்பில் எதிர்பால் உணர்வுகளை ஒருங்கே சங்கமிக்கச்செய்து எதிர்மறைகள் அனைத்தையுமே கட்டிப்போட்டு இலட்சியத்தோடு நடக்கத் தூண்டும் ஆழத்தோடான புனிதமான உறவு காதல். இந்தக் காதலுக்கு மகுடம் சூட்டும் நாளாக மேலைநாட்டுக் கலாசாரத்தில் உருவானது தான் காதலர் தினம். ஒவ்வொரு வருட பெப்ரவரி 14 ஆம் திகதியும் கொண்டாடப்படும் காதலர் தினம் கீழைத்தேச இளைஞர்களையும் வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

வியாபார நோக்கில் மேலைத்தேயர்களின் சுயநலத்திற்காக உருவாக்கிய தினம் என்றும் கலாசார சீரழிவுக்கு வித்திடுகின்றது என்றும் குறிப்பிட்ட சிலர் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எனினும் காதல் என்பதை கறுப்புக் கண்ணோட்டத்தில் பாராமல் ஆழமான அன்பின் அடித்தளமாக நோக்குபவர்கள் காதலர் தினத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். காதலர் தினம் உருவான விதம் பலவிதமாக கூறப்படுகிறது. செவி வழியிலான கதைகள் அதிகம் பேசப்படுவதுடன் ரோமானிய பாதிரியாரின் கதை எழுத்துருவில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

கி.பி. 270 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ரோமானியாவை ஆண்ட சக்கரவர்த்தி அங்கு நடைபெறும் திருமணங்களுக்குத் தடை விதித்திருந்தான். ஆண்கள் பெண்களைப் பார்த்துப் பேச முடியாத நிலை ஏற்பட்டதுடன் அதனை மீறியோருக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டு வந்தது. ஆண்கள் காதலிப்பதால்இ மணம் செய்வதால் இராணுவத்தில் சேர்வதில்லை என்றும்இ இது ரோமானிய இராணுவத்தை பலப்படுத்துவதற்கான திட்டம் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் வலண்டைன் என்ற பாதிரியார்இ சக்கரவர்த்தியின் கட்டளையையும் மீறி பலருக்குத் திருமணம் செய்து வைத்தார். காதலர்களைச் சேர்த்து வைத்ததால் பாதிரியார் மீது அந்த மக்கள் அதிக அன்பு கொண்டிருந்தனர். இதனை அறிந்து கொண்ட சக்கரவர்த்தி சிறைத்தண்டனை வழங்கியதாகவும் பெப்ரவரி 14 ஆம் நாள் அவரைக் கல்லால் அடித்து சித்திரவதை செய்து கொன்றதாகவும் சொல்லப்படுவதுடன் காதலர்களின் அன்பை மதித்தமையால் வலண்டைன் பாதிரியார் இறந்த தினம் பின்னாளில் வலண்டைன் எனும் காதலர் தினமாக அது அறியப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

எவ்வாறிருப்பினும் காதலுக்கும் தமிழுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. காதல் காவியங்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதுடன் செழுமைத் தமிழை மங்காமல் வாழவைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நாமறிவோம். பொருத்தமான துணையை அடைவதில் தவறில்லை. அவ்வாறு தேர்ந்தெடுப்பதில் தான் பிரச்சினை இருக்கிறது. பள்ளிப்பருவக் காதல்இ பஸ்தரிப்பிடக் காதல்இ முன் வீட்டுக் காதல்இ மொட்டை மாடிக்காதல் என நினைத்த மாத்திரத்தில் காதல் கொண்டு புணர்ந்து காணாமல் போவதற்குப் பெயர் காதல் அல்ல. அன்பின் புனிதத்துவம் கெடாமல் காலம் உணர்ந்து காத்திரமான உறவாக வளர்ந்து புரிந்துணர்வு விட்டுக்கொடுப்புடன் மிளிரும் காதல் பெற்றோருக்கும் கட்டுப்படும் என்பதில் ஐயமில்லை.

இராமாயணம் முதல் ஐம்பெருங்காப்பியங்கள் அடங்கலாக இலக்கியங்கள்இ இதிகாசங்கள் காதலையும் காதலின் உணர் நிலையையும் வெளிப்படுத்துவனவாகவே உள்ளன. ”காலத்தின் கண்ணாடி இலக்கியம்”" என்பர்கள். காதல் பழங்காலம் தொட்டு மனித உள்ளங்களில் நின்று நிறை கின்றமை தெரிகிறது. ஆகஇ காதலிப்பது தவறா? காதல்கொள்வது தவறா? அல்லது காதல் தவறா? போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு விடை காணவேண்டி வருகிறது. காதல் தவறு என எங்கும் குறிப்பிடப்படவில்லை. அது தவறு என்று சொல்வதற்கும் இல்லை. திரைப்படங்களில் வரும் காட்சிகளைப் போன்று முகம் காணாத ஒருவரை இலேசாக உரசிச் செல்லும்போது கண்ணும் கண்ணும் பார்த்துக்கொண்டு மறுநாள் காமத்தில் மூழ்கிவிடுவது தவறான கண்ணோட்டடாகும்.

வெறுமனே பார்த்தல்இ பழகுதல்இ பேசுதல் மாத்திரமன்றி ஒருவருக்கொருவரின் புரிந்துணர்விலும் விட்டுக் கொடுப்பிலும் காதலின் அடித்தளம் அமைகிறது. இது திருமணத்தின் முன்னதாகவோ பின்னராகவோ இருக்கலாம்.

திருமணத்தின் முன்னர் தான் காதல் என்றும் காதலின் இலட்சியம் திருமணம் தான் என்பதும் இளைஞர்கள் பலரின் எண்ணமாக இருக்கிறது. உண்மையான காதல் மரணித்தும் கூட வாழ்கிறது. ஏனென்றால் உயிரில்இ உணர்வுகளில் உயிரோட்டமாய் மாறி மனதின் அத்தனை மையங்களையும் அன்பால் கட்டுறச்செய்து சுவாசம் போன்று தொடரும் காதல் மரணித்த பின்னும் மணம் கொள்கிறது.

காதல் செய்யும்போது தம்மை காவியங்களின் கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் நினைத்து யதார்த்தத்தை மறந்து களிக்கும் காதலர்கள் எத்தனை பேர் தமது இலட்சியம் பற்றிச் சிந்திக்கிறார்கள்? மற்றும் காதலர்களின் வழியில் பெற்றோரை எதிரிகளாக பார்ப்பதும் பெற்றோர் காதலை நஞ்சென்று நோக்குவதும் பற்றிப் பார்த்தல் வேண்டும்.குழந்தை பிரசவமானதும் தாயானவள் அந்தக் குழந்தையை பற்றியும் அந்தக் குழந்தையை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பது பற்றியும் கனவு காண்கிறாள். தந்தை தனது கடமை குறித்து உணர்கிறார். இந்நிலையில் பிள்ளை வளர்ந்ததும் காதல் கொள்வதால் தவறான வழிக்கு இட்டுச் செல்லப்படுமோ என்ற ஆதங்கம் ஏற்படுகிறது. அதுவே பின்னாளில் எதிர்ப்பாக மாறுகிறது.

எனினும் ஆழமான அன்பினை வெளிப்படுத்துவதாக அமைந்து பெற்றோர் கண்ட கனவு கலையாத விதத்தில் தேடப்பட்ட துணையை பெற்றோர் ஏற்றுக்கொள்கிறார்கள். அதே நேரம்இ பெற்றோரின் மனநிலை பாதிக்கப்படாத விதத்தில் தமது காதல் துணையை தேடிக்கொள்ள வேண்டியது பிள்ளைகளின் கடமையாகும்.

மேல்நாட்டவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது காதலர் தினம்என்கிறோம்.இதில்நல்லவற்றை மட்டும்எடுத்துக்கொண்டால் என்ன? பரிசுப்பரிமாற்றங்களை விட தாம் கொண்டுள்ளது உண்மையான காதலா? அதன் நோக்கம் என்ன? அதனால் இலட்சியம் பாதிக்கப்படுகிறதா? பெற்றோரின் எண்ணப்பாடு என்ன என்பது பற்றி சுயமதிப்பீடு செய்யும் நாளாக அதனைக் கொள்ளலாம் அல்லவா?ஊடல் கூட குதூகலமான இன்பத்தை தருகிறது. இனிமையான பொழுதுகளைத் தருகிறது. வாழ்க்கையை ரசிக்கத் தூண்டுகிறது. இதயத்தின் ஆணிவேர் வரை சென்று ஒவ்வொரு நிமிடங்களையும் ரசனை நிறைந்த ரம்மியமான பொழுதுகளையாய் கழியச்செய்யும் காதலின் மகத்துவம் உணர்ந்து புரிதலோடு தொடர்வோம். காதலர் தினம் இன்பம் நிறைந்ததாகட்டும்.

0 கருத்துரைகள்:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes