Thursday, March 24, 2011

கொள்கையில்லா கூட்டமைப்பின் கோழை பிரச்சாரம்


தங்களிடம் எந்தவொரு கொள்கையுமே தற்போது இல்லை. தமிழ் மக்களுக்கான உரிமை, தேசியம், தமிழீழம் என்றெல்லாம் ஓர் மாயையை தோற்றுவித்து அதனூடாகவே தங்களது அரசியல் இருப்புக்களை தக்க வைத்துக்கொண்டிருப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தொன்றுதொட்டு வந்த பழக்கதோசமாகும். தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு, கொள்கை, உரிமை என்றெல்லாம் கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உண்மையில் தங்களிடம் எந்த கொள்கையுமே இல்லை என்பதனை இலங்கையிலிருந்து வெளியாகும் ஓர் தினசரி பத்திரிகையின் வாயிலாக தெரிவித்திருந்தார்கள்.(21-03-2011) அன்றைய பத்திரிகையாக இருக்கவேண்டும். அப்பத்திரிகையில் ஓர் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் குறிப்பிட்டிருந்தார் “தமிழ் மக்களுக்கான தீர்வை அரசே முன்வைக்க வேண்டும்” எனக் கேட்டிருந்தார்.
உண்மையில் அவர்களிடம் தமிழ் மக்களுக்கான தீர்வு இருந்தால் இந்த தேர்தல் வெற்றியோடு அரசுடன் பேசி அதனை பெறறிருக்கலாமே. அதனைவிடுத்து ஏன் அரசுதான் மக்களுக்கான தீர்வை முன்வைக்கவேண்டும் எனக்கேட்டிருந்தார். தமிழ் மக்களுக்கான எந்தவொரு தீர்வும் அவர்களிடம் இல்லை. அதனால்தான் அவர்கள் இன்றும் தீர்வு விடயம் தொடர்பாக அதாவது மக்களுக்கான தீர்வு உரிமை, என்றால் என்ன? என்கின்ற பதங்களுக்கு விளக்கம் கொடுக்காமல் மௌனித்துப்போய் இருக்கிறார்கள். இது மக்களுக்கு நன்றாக தெரிந்த ஒரு விடயம்தான்.
இத்தமிழ் தேசிய கூட்டமைப்பினர் குறிப்பிடுகின்றார்கள் தங்களுக்கு அமோக ஆதரவினை மக்கள் வழங்கி இருக்கிறார்கள் என்று கொக்கரிக்கிறார்கள். மக்கள் தொடர்ந்தும் தங்களை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் எனவும் அம்மக்களுக்கான அனைத்தையும் தமிழ் தேசிய கூட்டமைப்புதான் பெற்றுத்தரும். அதனை உணர்ந்துதான் மக்கள் மீண்டும் தங்களுக்கு ஆணை வழங்கி இருக்கிறார்கள் என கூக்குரலிடும் இக்கூட்டமைப்பின் கீழ்த்தரமான ஓர் செயலை உங்களுக்கு தெரியப்படுத்தியே தீரவேண்டும்.
நடந்த முடிந்த உள்ள+ராட்சி மன்ற தேர்தலிலே கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலே தேர்தல் நடைபெற்ற அனைத்து சபைகளையும் தாங்களே கைப்பற்றிவிட்டோம் என கனத்த குரலில் ஊழையிடும் இந்த குள்ள நரிக்கூட்டத்தின் கீழத்தரமான நடவடிக்கை என்னவென்றால் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலே ஒவ்வொரு வீடுகள் தோறும் தேர்தல் நடைபெறுவதற்கு இரு நாட்களுக்கு முன்னர் இறுவட்டுக்களை வழங்கி இருக்கிறார்கள். அந்த இறுவட்டுக்களிலே கருணா, பிள்ளையான் இருவரும் துரோகிகள் இவர்கள் பிரதிநிதுவப்படுத்தும் கட்சிகளுக்கு வாக்களிக்கவேண்டாம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கே நீங்கள் வாக்களியுங்கள். ஏன பிச்சை கேட்டிருந்தார்கள். அதாவது ஒரு இயலாதவன் தனது குறைகளை எடுத்துக்கூறி மற்றவரிடம் உதவி (பிச்சை) பெறுவதைப்போன்று இந்த குள்ளநரிக்கூட்ட கூத்தமைப்பு கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்தக்காட்சிகள் மற்றும் யுத்தகளத்தில் மக்கள் காயமடைந்திருந்த அவலக்காட்சிகள் அதனை ஒளிப்பதிவு செய்து ஒவ்வொரு வீடு வீடாக பிச்சை எடுத்துதான் தாங்கள் வென்றிருக்கிறார்கள். இந்த உண்மை உலகிற்கு தெரியாது. இதனை ஆதாரப+ர்வமாக வெளிக்காட்டுகிறோம்.
இக்கூட்டமைப்பினர் தொடர்ந்தும் தங்களது தேர்தல் வெற்றியினை மாத்திரம்தான் குறிவைத்து செயற்படுகிறார்கள். 1976 ஆம் ஆண்டு இடம்பெறவிருந்த தேர்தலில் தாங்கள் தோல்வியடைந்துவிடுவோம் எனக்கருதி 1975 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையிலே தமிழீழ பிரகடனத்தை கொண்டுவந்து அதனூடாகவே தேர்தலிலே அமோக வெற்றி பெற்றார்கள். அதேபோல இந்த ஆண்டு நடந்துமுடிந்த உள்ள+ராட்சி மன்ற தேர்தலிலே எமது உறவுகளின் விகாரக்காட்சிகளை ஒளிப்பதிவு செய்து அதனூடாக அனுதாபம் பெற்று வாக்குகளை சேகரித்தார்கள். அன்றைய வாக்கு சேகரிப்பின் விளைவுதான் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் வாயிலாக வந்த தமிழீழப்போராட்டம் அதனால் ஏற்பட்ட இழப்புக்களை இன்றும் எம்மால் ஈடுசெய்ய முடியாதுள்ளது.
அதேபோன்றுதான் இம்முறை எமது சகோதரர்களின் அவலக்கோலங்களையும் விகாரக்காட்சிகளையும் காண்பித்து உள்ளு+ராட்சி சபைகளை கைப்பற்றி இருக்கிறார்கள். இதனால் ஏற்படப்போகும் விளைவுகளுக்கு இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பதில் சொல்லுமா? அன்பு நெஞ்சங்களே சிந்தியுங்கள்! இவ்வளவு காலமும் எம்மை தங்களது அரசியல் இருப்பை தக்கவைக்க எவ்வளவு இன்னல்களுக்கு உள்ளாக்கி இருகக்pறார்கள் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பதனை பின்னோக்கி சற்று சிந்தித்து பாருங்கள்.
இன்று இலங்கையிலே கிழக்கு மாகாணத்தை எடுத்துகொண்டால் ஓர் தமிழன் முதலமைச்சர். அவரை கேலி செய்வதும் கொலைகாரன் என்றும் கொள்ளைக்காரன் என்றும் இரத்தக் கறை படிந்தவன் என்றும் பலவாறு தூற்றுகிறது இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊதுகுழல இணையத்தளங்கள். இவர்கள் சற்று சிந்திக்கவேண்டும். கிழக்கிலே ஓர் தமிழன் முதலமைச்சர் அதேபோல வடக்கிலே ஓர் தமிழரை முதலமைச்சராக வர முயற்சியுங்கள். உங்களுக்குள் நீங்கள் பேசிக்கொண்டு உங்களது பிரச்சினைகளை தீர்த்துகொள்ளுங்கள். அதனை விடுத்து முதலமைச்சர் பதவி துறக்க வேண்டும், அடாவடித்தனம் செய்கின்றார் என்று கூறுகிறார்கள். கிழக்கில் தற்போதைய உண்மைநிலை என்ன? இந்த முதலமைச்சர் இல்லாமல் போனால் மீண்டும் ஒரு தமிழன் முதலமைச்சராக வரமுடியுமா? தனித்தமிழர் வாழும் மாகாணமா? சனத்தொகை பரம்பல் என்ன? இதெல்லாம் தெரியாமல் புள்ளிவிபரங்கள் இல்லாமல் எழுந்தமானமாக விதண்டாவாதம் புரியும் இக்கூட்டமைப்பினர் இதுபோன்ற விடயங்களை சிந்திக்கவேண்டும்.
இத்தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கிழக்குமாகாணத்தை ஆட்சி செய்கின்றவர்கள் இரத்தக்கறை படிந்த மனிதர்கள் என தொடர்ந்து கூறிய வண்ணமே இருக்கின்றார்கள் அவர்கள் தங்களது அரசியல் கட்சியின் பின்புலத்தை சற்று சிந்தித்து பார்க்கவேண்டும். தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக உள்ள இரா.சம்பந்தன் தனது பதவிக்காக அப்போது திருகோணமலை மாவட்டத்தை பிரநிதித்துவப்படுத்திய தமிழ் நாடாளுமன்ற உறுபப்pனர் தங்கத்துரை என்பவரை குண்டுவீசி கொலைசெய்துவிட்டு ஆட்சிக்கு வந்தவர் .அதேபோல் கிழக்கிலிருந்து எந்தவொரு தலைமைத்துவமும் தலைதூக்கக்கூடாது என்கின்ற வடக்கின் அடிநாதத்தை அடிப்படையாக கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் புத்திஜீவிகள், அரசியல்வாதிகள் வரிசையில் பலரை பழி தீர்த்தது இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசிர்வாதத்துடன்தான். எடுத்துக்காட்டாக கிங்ஸ்லி இராசநாயகம், மற்றும் ராஜன் சத்தியமூர்த்தி ஆகியோரின் படுகொலைகள் குறிப்பிட்ட சிலதே.
ஏன்? இப்போதும் இவர்களது கட்சியில் கூட்டணி வகிக்கின்ற செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன் இதுபோன்ற பலர் செய்த கொலைகளின் எண்ணிக்கை எங்களுக்கு தெரியாதா? மக்களே சிந்தியுங்கள் கொலைக்கலாச்சாரத்தை வேரூன்றச்செய்த அரசியல் கட்சி எது? அத்தோடு அக்காலாச்சாரத்துக்கு உரமூட்டிய அரசியல் கட்சி எது? ஏன்பதையெல்லாம் நீங்கள் சற்று சிந்திக்கவேண்டும். அப்போதிருந்தே இவற்றையெல்லாம் புரிந்துவிட்டு தற்போது ஒன்றும் தெரியாததுபோல் கொலைக்கலாச்சாரம், இரத்தக்கறை என்பனவெல்லாம் புதிதாக உருவாக்கப்பட்டதென மக்களிடம் கோழைப்பிரச்சாரம் செய்யும் கூட்டமைப்பினருக்கு சாட்டையடி கொடுக்க சற்றும் தயங்காது வேகமாக எமது மக்கள் விரைந்து வரும் காலம் வெகு விரைவில்…… தொடரும்..

Monday, March 21, 2011

ஐவர்



ரமணாவும் திருவும் நண்பர்கள். தனக்கு மனைவியை ரமணா தான் தேர்வு செய்ய வேண்டும் என்கிற அளவுக்கு அவர்கள் இறுக்கமாகிறார்கள்.

ரமணாவுக்கு திருமணம் முடிந்து முதலிரவில் இருக்கும் போது திருவுக்கு அடிப்பட்டு ஆஸ்பத்திரியில் இருப்பதாக தகவல் வர மனைவியை விட்டு விட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடுகிறான்.

அவன் நடவடிக்கை மனைவியை எரிச்சலூட்டுகிறது. நண்பர்களை பிரிக்க சதி செய்கிறாள். தம்பியை விட்டு திரு மேல் திருட்டு பழி சுமத்தி கணவனிடம் இருந்து விலக்குகிறாள். ஆத்மார்த்த நண்பன் மனமாற்றத்தால் திரு நொறுங்கி குடிகாரன் ஆகிறான்.

அவன் நிலையை அறியும் நான்கு இளைஞர்கள் போதையில் இருந்து மீட்டு நண்பனிடம் சேர்த்து வைக்க போராடுவது கிளைமாக்ஸ்....

திருவண்ணாமலையில் ஊதாரியாக சுற்றும் நான்கு இளைஞர்களுடன் படம் துவங்குகிறது. அவர்களில் ஒருவன் வயிற்றில் பெரிய கட்டியுடன் ஆஸ்பத்திரியில் துடிக்க ஆபரேசனுக்கு பணம் இன்றி மற்ற மூவரும் தவிக்கின்றனர்.

அப்போது ரமணா தானே முன் வந்து பண உதவி செய்கிறான். பழைய பகை இருந்தும் அதை மறந்து உதவிய ரமணா நால்வர் மனதிலும் உயர்கிறான். அவனை வீட்டில் போய் பார்க்கும் போது திருவை பிரிந்ததும் அதனால் குடிக்கு அடிமையானதையும் அறிகின்றனர்.

அவர்களை சேர்த்து வைக்க நால்வரும் எடுக்கும் முயற்சிகள் அழுத்தமானவை. நான்கு இளைஞர்களாக வரும் விஜய் ஆனந்த், இலா, பேரரசன், ஹிசைன் தனித்தனியாய் வீட்டுக்கு மூத்த குடிமகனை அழைத்து வந்து மரியாதை செய்தல், குடிக்க அம்மா மோதிரத்தை கழற்றுதல், இன்னொருத்தன் மனைவி மேல் ஜொள் விடுதல், வயிற்று வலியால் துடித்தல் என வித்தியாச நடத்தைகளில் வலுவூட்டுகின்றனர்.

எல்லோருக்கும் உதவும் மனதுக்காரர் ரமணாவாக வரும் ஸ்ரீமன் நட்பில் ஆழம் காட்டுகிறார். திருவாக வரும் ஹாரிஸ் நடிப்பில் முதிர்ச்சி. புதுப்பெண்ணாக வரும் ஜெயஸ்ரீ நட்பில் தீ வைத்து சீறுகிறார்.

ரமணா-திருவின் நட்புக்கு அழுத்தமான காட்சி பதிவு இல்லாதது குறை. கார்த்திகை தீப திருவிழா காட்சிகள் கண்கொள்ளா பிரமாண்டம். மல்லிகா கிளுகிளுப் பூட்டுகிறார்.

கவி பெரியதம்பி இசையில் “நீ மட்டும் மாறிட்டியேடி”, “கொத் தவரக்கா செடியிலே” பாடல்கள் ரசனை. நட்பின் வீரியத்தை காட்சிபடுத்தியுள்ளார் இயக்குனர் என்.ப்ரியன். இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம்.

கிழக்கின் சுயநிர்ணயம் - 07

இதே போன்று 1971 ஆம் அண்டின் கல்வி தரப்படுத்தல் என்கிற சட்டத்தினூடு யாழ்ப்பாணம் எதிர்கொண்ட பாதிப்புகளை தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சனைகளாக பிரச்சாரப்படுத்தி அதில் வெற்றியும்கண்டனர். ஆனால் இந்தப் பிரச்சனையின் உள்நோக்கம் யாழ்-அதிகார-வர்க்கத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ளும் நோக்கு மட்டுமேயன்றி தமிழ் மக்களின் நலன் அல்ல.
இனிமேலாவது அம்பலத்திற்கு வரவேண்டிய ஒன்று.1975 ஆம் ஆண்டின் இலங்கையின் சனத்தொகை கணக்கெடுப்பின் படி சிங்களவர்கள் 72 வீதம்மாகவும் இலங்கைத் தமிழர்கள் 11.2 வீதம் மாகவும் இந்தியத் தமிழர்கள் 9.3 வீதம் மாகவும்முஸ்லிம்கள் 7.1 வீதம் மாகவும் ஏனையோர் 0.5 வீதமாகவும் காணப்பட்டனர். இதேவேளை 1970ஆம்ஆண்டில் பல்கலைக்கழக அனுமதியை நோக்கும் இடத்து 40.8 வீதத்தினை பொறியியல்துறையிலும்இ 35 வீதத்தினை விஞ்ஞானத்துறையிலும்இ 50 வீதத்தினை மருத்துவத் துறையிலும்இலங்கைத்தமிழர்கள் பெற்றிருந்தனர். ஒரு நாட்டின் சனத்தொகையில் 11 வீதத்தினை மடடுமேகொண்டுள்ள ஒரு இனம் அந்நாட்டின் பல்கலைக்கழக அனுமதிகளில் மேற்படி அதீத இடங்களைஅனுபவித்து வருவதை ஏனைய சமூகங்கள் அpங்கீகரிக்க வேண்டும் என்று கோருவது எவ்வகையிலும்நியாயமானதாகாது.

இந்த “மாவட்ட ரீதியான கல்வி தரப்படுத்தல்” என்பதன் உள்ளீடு என்ன? கல்வி வாய்ப்புகள் மீதான ஒதுக்கீடு என்பதற்கப்பால் ஏதுமில்லை. இந்தியாவில் தங்களுக்கான தகுதிகளை பெற்றுக்கொள்ள வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருந்த தலித்துகளுக்காக வழங்கப்படும்இட ஒதுக்கீடுகளுக்கு ஒப்பானது இந்த தரப்படுத்தல் எனலாம். இலங்கையில் கல்விரீதியாக வளர்ச்சியடைந்த கம்பஹாஇ கொழும்புஇ யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளின் மாணவர்கள் மட்டுமே பல்கலைக்கழக வாய்ப்புகளை அதிகம் பெற்றுக் கொண்டிருந்தனர். அன்றைய கணிப்பின்படி இருபத்திரெண்டு மாவட்டங்களில் ஏனையவற்றில் பெரும்பாலானவை பல்கலைக்கழகத்திற்கான புகுமுக வாய்ப்புகளை பெறவாய்ப்பின்றி இருந்தனர். இன்னிலையில் இலங்கைத் தீவின் சமத்துவத்திற்கான திட்டங்களில் ஒன்றாகவே இத்திட்டம்முன்னெடுக்கப்பட்டது. பின்தங்கிய மாவட்டங்களுக்கு முடிந்தவரை அதிக இடங்களை பல்கலைக்கழகங்களில் பெற்றுக்கொடுப்பதற்காக இத்திட்டம் பயன்பட்டது. அதுவரை
பெரும்பகுதி பல்கலைக்கழக இடங்களை அபகரித்து வந்த மேட்டுக்குடிகளுக்கும், வாய்ப்புகள்கிடைக்காது அவ்விடங்களை நழுவ விட்டுவந்த அடித்தட்டு மக்களுக்கும் இருந்த ஒரேவித
அளவுகோல் நிறுத்தப்பட்டது. மேட்டுக்குடிகளை அதிகம் கொண்டிருந்த வாய்ப்புகள் கூடிய
மாவட்டங்கள் அதிக எல்லைப் புள்ளிகளை பெறவேண்டும் என்றும் பின்தங்கிய (பிற்படுத்தப்பட்ட) பிரதேசங்களடங்கிய மாவட்டங்கள் என இனங்காணப்பட்டவை குறைந்த எல்லை புள்ளிகளுடன் பல்கலைக்கழக வாய்ப்புகளை பெறலாம் என்பதாக தரப்படுத்தப்பட்டன. ஓவ்வொரு மாவட்டத்திலும் தரங்களுக்கேற்ப குறைந்த பட்ச தகுதிக்கான எல்லை புள்ளிகள் வௌ;வேறாக நிர்ணயிக்கப்பட்டன.
இதன் பின்னர் குறிப்பாக யாழ்ப்பாணம்இ கம்பஹாஇ கொழும்பு போன்ற மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் பெற்றுவந்த அதிகப்படியான இடங்களை இழந்தனர். அதேவேளை அவ்விடங்கள் பின்தங்கிய மாவட்ட மாணவர்களுக்கு கிடைப்பது ஏதுவாயிற்று. குறிப்பாக தமிழர்கள் செறிந்து வாழும் மாவட்டங்களான மன்னார்இ வவுனியாஇ முல்லைத்தீவுஇ திருகோணமலைஇ மட்டக்களப்புஇ அம்பாறை என்பன (கவனிக்க இவையனைத்தும் தமிழ்தேசியம் கட்டமைத்த புவியியல் எல்லைக்குள் வருபவை) பயனடைந்தன. அத்தோடு இந்திய வம்சாவளியினரான மலையக தோட்டத் தொழிலாளர்கள் செறிந்து வாழும் பகுதிகளான பதுளை, நுவெரெலியாஇ மாத்தளை போன்ற பிரதேசங்களின் மாணவர் சமுதாயம் முதன் முதலாக பல்கலைக்கழக வாசல்களை மிதிக்கும் வாய்ப்புகளை இந்த மாவட்டரீதியான தரப்படுத்தலே வழங்கியது. இதுபோன்றுதான் விவசாயிகளையும் மீனவர்களையும் அதிகம் கொண்டிருந்த அம்பாந்தோட்டை, மாத்தறை, மொனறாகலை பீட்டர் கெனமன், என். எம். பெரேரா, கொல்வின் ஆர்.டி. சில்வா போன்ற இடதுசாரிகள் இச்சட்டத்தை ஆதரித்தனர் என்பதை கவனிக்க தவறக்கூடாது அதுமட்டுமல்ல இச்சட்டம் கொண்டுவரப்படவேண்டும் என அரசிற்கு அழுத்தம் கொடுத்ததிலும் இவ் இடதுசாரிகளின் பங்கு அதிகமாயிருந்ததை அறிய முடிகிறது.இந்த கல்வி தரப்படுத்தல் அமுலான பின்பு அதுவரை முழு இலங்கைக்குமான உயர்கல்வி வாய்ப்புகளை தமக்குள் பங்கிட்டுக்கொண்டிருந்த மேட்டுக்குடிகளின் மாவட்டங்கள் பாதிப்படைந்தது உண்மை.

மாவட்ட ரீதியான தரப்படுத்தலும்இ ஒதுக்கீடும் 1974 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பும் இது இனரீதியாகவோஇ மொழிரீதியாகவோ தமிழர்களை மட்டும் பாதித்ததாக சொல்வது பிழை இதன் பாதிப்பை எதிர்கொண்ட உயர்வர்க்கத்தினரில் தமிழ் மேட்டுக்குடியினரும் அடங்குவர். அதேவேளை இதனால் லாபமடைந்தவர்கள் சிங்களவர்கள் மட்டுமல்ல அறிக்கையின் முன்பகுதியில் குறிப்பிட்டதுபோல் தமிழ் பேசும் அதிக மாவட்டங்கள் இதனால் பயனடைந்தன.கம்யூனிச விரோதமும் உயர்சாதித் தடிப்பும் கொண்டியங்கிய தமிழரசுக் கட்சியினர் 1970 ம் ஆண்டுத் தேர்தலில் படுதோல்வியடைந்தனர். இடதுசாரிகளது சாதி எதிர்ப்புப் போராட்டங்களின்போது தமிழரசுக்கட்சியினரது காட்டிக் கொடுப்புகள் அத் தேர்தலில்வடபகுதியில் அவர்களை படுதோல்விக்கு தள்ளியது. தமிழ் தளபதி என்றும்இநல்லூர் சிங்கம்என்றும் அழைக்கப்பட்ட பெரும் தலைவர்கள் மக்களிடையே அம்பலமாகினர். இன உணர்வுகளை கிளறிதமிழ் தேசிய வெறிய+ட்டுவது மட்டுமே வாக்கு வேட்டைகளுக்கு உகந்த ஒரே வழியாக எஞ்சிநின்றது. யாழ் மத்தியதர வர்க்கத்தினரது அபிலாசைகள் ஒரு தமிழினத்தின் அரசியல் அபிலாசைகளாக முன்னிறுத்தப்பட்டது மட்டுமன்றி யாருக்கு இச்சட்டம் ஒதுக்கீடுகளையும்இ வாய்ப்புகளை வழங்கியதோ அவர்களைக் கொண்டே அதனை எதிர்க்கும் வண்ணம் கிழக்கிலங்கை தமிழர்கள் திசைதிருப்பப்பட்டனர். தாம் ஆதரிக்க வேண்டிய சட்டத்தை எதிர்க்கும்படி யாழ் தவிர்ந்த ஏனைய ஏழு மாவட்டத் தமிழர்களும் ஏமாற்றப்பட்டது மிகவும் பரிதாபமான அதிசயம்.


 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes