சில்க் பற்றி யார் வேண்டுமானாலும் படம் எடுத்துவிட முடியாது. அவரை சினிமாவில் அறிமுகப்படுத்திய என்னை கேட்கணும் என்று பிரபல நடிகர் வினு சக்கரவர்த்தி புலம்பி வருவதை பலரும் அறிவார்கள்.

மும்பையில் இருந்து சில்க் கதையை எடுக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்திறங்கிய தயாரிப்பாளரையும், இயக்குனரையும் இங்குள்ள ஒருவர்தான் பணத்தை வாங்கிக் கொண்டு திசை திருப்பி விட்டுவிட்டார்.

அவர் யாரென்பதை நான் அப்புறம் சொல்வேன் என்கிறார் வினுச்சக்கரவர்த்தி. நான் லண்டனில் இருந்த நேரத்தில் சென்னைக்கு வந்தவர்களிடம், வினு சக்கரவர்த்தியை தொடர்பு கொண்டால் அவர் ஒரு கோடி பணம் கேட்பார். படம் எடுங்கள்.

நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். யாராலும் அப்படத்தை தடுக்க முடியாது என்றெல்லாம் சம்பந்தப்பட்ட நபர் தைரியம் கொடுத்ததாகவும் புலம்புகிறார் வினு. அது யாரோ?