Tuesday, July 27, 2010

என்னத்தை சொல்ல....

இது தமிழர் பிரதெசமெங்கும் கோயில்களில் திருவிழாக்கள் இடம்பெறும் காலம்.குறிப்பிட்ட ஒரு ஆலயத்தின் திருவிழா ஆரம்பமாகிறது என்றால் அந்த கிராமத்தில் அல்லது குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் அசைவ உணவுகளை மக்கள் முற்றாக தவிர்த்துக்கொள்ளும் வழக்கம் காணப்படுகிறது. இது சட்டரீதியான தடை இல்லாவிட்டாலும் மரபு ரீதியாக வந்த வழிமுறை என்பது எல்லோரும் அறிந்த விடயம்.


அதனையும் மீறி அசைவ உணவுகளை அந்த காலப்பகுதியில் உண்பதால் கடவுள் குற்றம்
என்பதும் அவ்வாறு நடந்துகொள்பவர்களை ஒரு மாதிரியான கண்ணோட்டத்தில் பார்ப்பதுவும்
கண்கூடாக காணக்கூடியவை. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் இந்நிலமையில் பெரிதளவு
மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் அந்த எல்லையை விட்டு வெளியே சென்றால் அசைவ உணவ கிடைத்தால்...... பிறகு என்னவென்ற உங்களுக்கு சொல்லத் தேவையில்லை.புரிந்திருக்கும்.

இளைஞர்களை மட்டும் கூறவில்லை வெளியிடத்திற்கு சென்று மாமிச உணவுகளை
யாருக்கும் தெரியாமல் வாங்குகிறோம் என்று நினைத்துக்கொண்டு வாசனை வெளியில் வராமல் சமைப்பவர்களும் உண்டு. இது கடவுள்மேல் சத்தியமான உண்மை. என் அனுபவத்தில் திருவிழா நடந்தகொண்டிருந்த சமயத்தில் என் நண்பனொருவனுடன் உரையாடியபோது....

"நேற்று நல்ல அடிடா"

நான் " என்னத்தடா சொல்ற"

" இல்ல நல்ல சாப்பாடு"

எனக்கு புரிந்துவிட்டது.

"கடையில சாப்பிட்டதா?"

"இல்ல ரெண்ட துண்டு சிக்கன் பீஸ் வாங்கி வந்தன் பகல் ஒண்டு இரவு ஒண்டு, தரமா இருந்துது"

நோயாளி மாத்திரை போடுவது மாதிரி சொல்லிமுடித்தான்.

எனக்கு எதுவும் சொல்லத்தோன்றவில்லை. இது சரியா? தவறா? இப்பொழுதும் யோசித்துக்கொண்டிருக்கிறேன். முதலில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும்
கட்டுப்பாடோடு இருக்க பழக வேண்டும். நான் இதை மட்டும் கூறவில்லை. அது எந்த விடயமாக இருந்தாலும் சரி...
அதற்கு இதுபோன்ற "அசைவ உணவு தவிர்ப்பு" கட்டுப்பாடோடிருக்க பழகிக்கொள்வதற்கான ஒரு வழியாக இருக்கும். கடவுள் , சமயம் , ஒழுக்கம் எல்லாம் இன்னொரு புறமிருக்கும். இருந்தாலும் இந்த சிக்கலுக்கு என்னால் சரியான தீர்வ எட்டமுடியவில்லை. அதனால் உங்களிடமே இதனை விட்டுவிடுகிறேன். கொஞ்சம் குழப்பமில்லாமல் தெளிவான பதில் ஒன்றை தாருங்கள் பார்ப்போம்.

0 கருத்துரைகள்:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes