Saturday, July 24, 2010

எல்லோரும் காதலிப்போம்..

இந்த பதிவினை வாசிக்கும் முன்னர் நீங்கள் டென்சனாக இருந்தால் கொஞ்சம் மனதை ரி-லாக்ஸ் படுத்திக்கொள்ளுங்கள். அமைதியான சூழலில் இருந்து வாசியுங்கள் காதலின் சுகத்தை உணர்வீர்கள். தாயின் மடியில் சாய்ந்து தூங்கும்போது ஏற்படும் சுகத்தை எல்லோரும் அனுபவித்திருக்கின்றோம். அதேபோன்ற இதமான உணர்வை ஊட்டுவதுதான் காதல். நான் காதல் என்று விளிப்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான நட்பை மட்டுமல்ல.. புரிந்துணர்வு கொண்ட இரு உள்ளங்களுக்கிடையேயான தொடர்பும் காதல்தான். அத ஒரு ஆணும் ஆணுமாக இருக்கட்டும் , அல்லது பெண்ணும் பெண்ணுமாக இருக்கட்டும் , தந்தையும் மகனுமாக இருக்கட்டும் ஒரு சிறுவனும் பாட்டியுமாக இருக்கட்டும், ஒருவருக்கொருவர் சரியாக புரிந்துகொண்டு பழகும்போது ஒருவாகின்ற நட்பு காதலின் சுகந்தத்தை உணர்த்தும்.

 நீங்கள் அதிக பிரியம் வைத்திருக்கின்றீர்களோ அவரைப்பற்றிய நினைவுகளை எங்கோவாவது பார்க்கும்போதோ, யாராவது பேசும்போதோ உங்களுக்குள் ஒரு மாற்றம் , பரவசம் தோன்றும் முகத்தில் மலர்ச்சி ஏற்படும் அப்படி இல்லை என்று உங்களால் மறுக்கமுடியுமா? நிச்சயமாக முடியாது அதுதான் காதல்.

 ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவது காதல். அதிலும் குறிப்பாக இளமைப்பருவத்தில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படுகின்ற ஈர்ப்புதான் மிகவும் சுகமானதாக இருக்கும். இது நான் அனுபவித்ததன்படி கூறுகின்றேன். உங்களில் சிலருக்கு மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம். என்னுடைய அனுபவத்தில் நான் அவளை நினைத்தால் போதும் எப்படிப்பட்ட நிலையில் மனம் இருந்தாலும் சொர்க்கத்தை தொட்டுவிடும். அவளுடன் பேசும்போதோ தூரத்தில் இருந்து ரசிக்கும்போதோ, ஆஹா.. வார்த்தைகளால் அளவிடமுடியாது. எத்தனை சுகம்.

அவள் இல்லை என்றால் வாழமுடியாது என்று  மனதில் தோன்றும். அவளை அடைவதற்கு என்ன இலட்சியத்தை நான் நிறைவேற்ற வேண்டுமோ அதை நிறைவேற்ற ஒரு துடிப்பும் , உற்சாகமும் தோன்றும். காதலின் சக்தியை பாருங்கள் எத்தனை அற்புதம்.

நான் அவளை பார்க்கும்போது ஏற்படும் சுகத்தை விட அவள் என்னை மறைந்திருந்து பார்த்துவிட்டோ , எங்கெல்லாமோ சுற்றி தெடிவிட்டோ வந்து " உன்னைத்தாண்டா தேடின எங்க போன " என்று சிணுங்கும்போது எப்படியிருக்கும் தெரியுமா? என்ன தவம் செய்தேன் இந்த காதலை அனுபவிப்பதற்கு.பெரும்பாலும் இந்த இளமைக்காதலை எல்லோரும் உணர்ந்திருப்பீர்கள் என்பது நிச்சயம். காதல் மயக்கத்தில் எங்கேயா சென்றுவிட்டேன் பார்த்தீர்களா.. விடயத்திற்கு வருகிறேன்..

நாமும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவோம். பிரச்சினைகளை மனம்திறந்து பேசுவோம்., எழுதுவோம், புரிந்துகாள்வோம். எல்லோரும் காதலர்களாவோம்.

காதல் பயணம் தொடரும்....

0 கருத்துரைகள்:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes