அண்மையில் நிகழ்வொன்று பார்க்கக்கிடைத்தது. தலைப்பு நான்கு கோணங்களும் ஒரு கோணியும். வேறுபட்ட தொழில்களையுடைய அவர்கள் ஜோக்குக்காக கலாய்த்துவிட்டு சென்றார்கள். அதில் அவர்கள் மண்டிக்கவிதை என்றும் குறில் நெடில் கவிதை என்றும் பஞ்ச் வசனம் என மூன்று விதமான வெளிப்பாடுகளை காட்டியிருந்தார்கள்.
முதலில் வந்தார் ஒரு மாணவி அவர் கூறிய மண்டிக்கவிதை
அப்பாவரு அம்மாவுக்கு அடிக்கிற மட்டை
அதால கிழியுது அம்மாவுட சட்டை
அதை தடுக்க நான் எறிவேன் சுரட்டை
அதற்கு பிறகுதான் எனக்கு நிம்மதியான குறட்டை
அடுத்து ஒரு விவசாயி
நான் சீக்கிரமே எழுந்திடுவேன் காலை
எழுந்தவுடன் குடித்திடுவேன் பாலை
மண்ணை கொத்துவதுதான் என் வேலை
ராம் ஒன்று அடித்திடுவேன் மாலை
அவர் சிறிது இடைவெளியின் பின்னர்
அடித்தபின் வீட்டிற்கு சென்று உரித்திடுவேன் மனைவியின் தோலை
அடுத்து ஒரு வைத்தியர்
ஆஸ்பத்திரியில இருக்குது ஏசி
நான் உனக்கு போடுவேன் ஊசி
நீ எனக்கு கொடுக்கணும் காசி
இப்போ எனக்கு தேவை ஒரு நேர்சி
அடுத்து ஒரு ஆசிரியர்
கற்பிப்பதிலே நான் ஒரு கில்லி
அதால எனக்கு கிடைக்குது சல்லி
கற்றபின் போற்றமே உன் பெயர் சொல்லி
அடுத்து ஒரு இளைஞன்
நான் அவளைப் பார்த்தேன் சரியான பாடா
அவ என்னைப்பார்த்தா சூடா
அவ அப்பா என்னைக்கண்டா கூப்பிடுவாரு வாடா
நான் எடுப்பேன் ஓட்டம் மாடா
குறில் நெடில் கவிதையையும், பஞ்ச் வசனத்தையும் அடுத்த பதிவில் எதிர்பாருங்கள்.....



1:50 AM
Jana Master
0 கருத்துரைகள்:
Post a Comment