Thursday, August 11, 2011

இலங்கைக்கு எதிரான சர்வதேச அழுத்தங்கள் எடுபடப்போவதில்லை


னிதாபிமான முறையில் பிரச்சினைகளையும், நெருக்கடிகளை யும் தீர்த்து வைக்கும் ஒரு புதியநடைமுறையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உலகிற்கு எடுத்துக்காட்டிய சாதனையாள ராகதிகழ்ந்து வருகிறார். மேற்கத்தேய நாடுகள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கையாண்ட தீர்வுகள்படுதோல்வி அடைந்த காரணத்தி னால், சில வருடங்களுக்கு முன்னர் உலகில் அல்கய்தா பயங்கரவாதம் வலுப்பெற்று உலகின் வல்லரசு நாடு என்று மார்பு தட்டிக் கொண்டிருந்த அமெரிக்காவின்இரட்டைக் கோபுரங்களை தகர்த்து அமெரிக்காவை மட்டுமன்றி முழு உலகையே பதற்றமடையச்செய்தது.

இந்த அல்கய்தா பயங்கரவாதம் வளர்ச்சியடைவதற்கு அமெரிக்காவும், பிரிட்டன் உட்பட ஏனையஐரோப்பிய நாடுகளே பொறுப்பை ஏற்க வேண்டும். பலம் வாய்ந்த நாடாக வளர்ந்து வந்த ஈராக்கையும் அதன் ஜனாதிபதி சதாம் ஹ¤சைனையும் பார்த்து பொறாமை யும், பீதியும் அடைந்த இந்தமேற்கத்தேய வல்லரசுகள் ஈராக்கை சீர்குலைத்து அதன் அரசியல் தலைமைத்துவத்தை நிர்மூலம்ஆக்கினால், தங்கள் செல்வாக்கு உலகில் தழைத்தோங்கும் என்ற தவறான நோக்கத்துடன்ஈராக்கிற்கு எதிராக ஒரு தலைப்பட்சமான யுத்தத்தை ஆரம்பித்தன.

சதாம் ஹ¤சைன் தன் கைவசம் இரசாயன ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கிறார் என்ற போலிகுற்றச்சாட்டை சுமத்தி ஈராக்கை தங்கள் படைப்பலத்தைப் பிரயோகித்து இன்று, இரத்த ஆறாகமாற்றி அங்குள்ள மக்களை நாளாந்தம் குண்டு வெடிப்புக்கள் மூலம் படுகொலை செய்யும் ஒருவன்முறைக் கலாசாரத்திற்கு அமெரிக்கா உட்பட ஐரோப்பிய வல்லரசுகள் வித்திட்டன.

அதுபோன்றே ஈரானிலும் பிரச்சினைகளை உண்டுபண்ண இந்த தீய வல்லரசுகள் முயற்சி செய்துவருகின்ற போதிலும், அந்நாட்டு அர சாங்கத்திற்கு மக்களின் பேராதரவு இருப்பதனால்அம்முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. இன்று இதே பாணியில் லிபியாவிலும் தங்கள்வன்முறைகளை இவர்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.

மத்திய கிழக்கில் அமெரிக்கா யூதர்களின் செல்வாக்கிற்கு அடிபணி ந்து இஸ்ரேலிய அரசாங்கத்தின்செல்லப்பிள்ளையாகி, அவர்க ளின் விருப்பத்தை நடைமுறைப்படுத்தும் ஒரு பொம்மையாக மாறி,இஸ்ரேலிடம் தங்கள் நாட்டை இழந்து அல்லல்படும் பலஸ் தீனிய மக்களுக்கு மென்மேலும்துன்பத்தை ஏற்படுத்தும் கொள் கையை கடைப்பிடித்து வருகிறது.

இலங்கையிலும் பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அமைதியையும் இன ஐக்கியத்தையும்பொருளாதார வளர்ச்சியையும் ஏற்படுத்தி வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின்தலைமையிலான அர சாங்கத்தை துன்புறுத்தி அதன் மூலம் இன்பத்தை அனுபவிக்கும்மனோநிலையை அமெரிக்கா உட்பட மேற்கத்தேய நாடுகள் இன்று கடைப்பிடித்து வருகின்றன.

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்த மிகப் பெரிய பயங்கரவாத இய க்கமான எல்.ரி.ரி.ஈ.யைஇந்நாட்டு மக்களுக்கு பெரியளவில் உயிர் இழப்பையோ, பொருள் இழப்பையோ ஏற்படுத்தாதவகையில் மனி தாபிமான முறையில் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து யுத்த த்தைவெற்றிகரமாக நடத்தி இறுதியில் பயங்கரவாதத்திற்கு ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷமுற்றுப்புள்ளி வைத்தார்.

இதனைப் பார்த்து பொறாமையில் துடித்துக் கொண்டிருந்தவர்கள் போலிக் குற்றச்சாட்டுக்களைசுமத்தி, அரசாங்கத் தலைவர்களை தண் டிப்போம் என்றும் தருஸ்மன் போன்ற ஆதாரமற்றஅறிக்கை களை அணிகலனாக வைத்துக்கொண்டு, இந்நாடுகள் இப்போது மேற் கொண்டு வரும்போலிப்பிரசாரம் உலக நாடுகளில் எக்காரணம் கொண்டும் எடுபடப்போவதில்லை என்றஉண்மையை நாம் நம் நாட்டு மக்களுக்கு ஞாபகப்படுத்துவது அவசியமாகும்.

போர்க்குற்றம் பற்றிய சர்வதேச ஒப்பந்தம் ஒன்றில் இலங்கை கைச் சாத்திடாத காரணத்தினால்அதன் மீது போக்குற்றங்களை சுமத்தி, நம் நாட்டு அரசாங்க தலைவர்களை சட்டபூர்வமாகதண்டிக்க முடியாது என்பதை சர்வதேச சட்டங்களை நன்கு அறிந்துள்ள சட்டவல்லுனர்கள்ஊர்ஜிதம் செய்கிறார்கள்.

இந்த நிலைப்பாட்டையே இந்திய அரசாங்கமும் கொண்டுள்ளது. இந் திய அரசாங்கம் இந்நாட்டின்இனப்பிரச்சினைக்கு சுமுக தீர்வொ ன்றை ஏற்படுத்துவதில் மாத்திரம் அக்கறை கொண்டிருக்கிறது.

இதனை புரிந்து கொள்ளாமல், தமிழ் நாட்டின் புதிய முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளசெல்வி ஜெயலலிதா இலங்கை அரசா ங்கத் தலைவர்கள் மீது யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்திஅவர் களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டுமென்று இந்திய மத்தியஅரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறார்.

இந்த அறிவித்தல் அவருக்கு சர்வதேச சட்டத்திலும், சர்வதேச இரா ஜதந்திரத்திலும் அனுபவமோ,அறிவோ இல்லை என்பதற்கே சான்று பகர்கின்றது. எந்த சக்திகள் இலங்கைக்கு எதிரான போலிப்பிரசாரங்களை வெளிநாடுகளில் மேற்கொண்டாலும், நிறைகுடம் தளம்பாது என்பதற்கமைய,ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் நல்லாட்சி தங்குதடையின்றி தொடர்ந்துகொண்டே இருக்கும்.

(தினகரன்

2 கருத்துரைகள்:

Mohamed Faaique said...

அருமையான கட்டுரை...
இன்னும் நல்லா சொல்லு ராசா....

Anonymous said...

poda vennai

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes