இலங்கையில் 1017 ம் ஆண்டு தொடங்கிய சோழராட்சி 1070 ல் தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் 11ம்இ 12ம் நூற்றாண்டுகளில் கிழக்கிலங்கை உட்பட்ட உருகுணை ராச்சியத்தின் கீழ் இருந்த பெரும்பகுதிகள் பொலநறுவையிலிருந்து ஆண்ட பராக்கிரமபாகுவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. இந்த பராக்கிரமபாகுவின் ஆட்சி காலத்தில் மட்டக்களப்பில் குறுநிலமன்னனாக தினசிங்கன் எனும் தமிழ் மன்னன் ஆண்டு கொண்டிருந்தான். எனினும் அவனும் அவனது தமிழ் குடிகளும் சமண சமயத்தை பின்பற்றுவோராயிருந்தனர்(5). கரவாகு பகுதியாகிய கல்முனையை ரகுகுமான் ராஜா என்பவர் ஆண்டுகொண்டிருந்தார். இந்த தினசிங்கனது ஆட்சி மீண்டும் இந்தியாவிலிருந்து படையெடுத்து வந்த கலிங்க மாகோன் என்பவரால் தோற்கடிக்கப்பட்டது(6).
இந்த கலிங்க மாகோனே விஜயகாலிங்க சக்கரவர்த்தி எனும் பெயரில் இலங்கை முழுவதையும் ஆண்டான் அவ்வேளைகளில் பழுகாமம் அவனது கிழக்கு பிரதேசத்தின் உபராசதானியாக இருந்தது. கரவாகு பகுதிக்கு திஸ்ஸ அலிபோடி ஆளும் அதிகாரம் பெற்ற இராச பிரதானியாக இருதுள்ளார்(7).
1225 ல் தொடங்கிய மாகோனது ஆட்சி 1256 ல் தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் முன்பு போலவே கிழக்கிலங்கை உருகுணை ராச்சியத்தின் கீழ் வந்தது(8). இந்நிலை ஐரோப்பியரது காலணித்துவ ஆட்சி தொடங்கும்வரை நீடித்ததை நாம் காணலாம். இந்த வரலாற்று குறிப்புகளின் பின்னணியின் இடையிடையே ஏற்பட்ட சோழஇ பாண்டியஇ ஆட்சிகாலங்களை தவிர சுமார் 2500 வருடகாலத்தின் பெரும் பகுதியில் கிழக்கிலங்கையானது தீகவாவிஇ மாகமம்இ கண்டி போன்ற தலைநகரங்களை கொண்டிருந்த உருகுணை ராச்சியத்துடன் இணைந்தே காணப்பட்டது. காலாகாலமாக கிழக்கில் வாழ்ந்த மக்கள் தமிழையே பேசினாலும் பௌத்தமும்இ சைவமும்இ இஸ்லாமும்இ ஏன் சமணமும் கூட அவர்களால் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. இனமத வேறுபாடுகள் அவர்களை கூறுபோட்டிருக்கவில்லை. உருகுணையின் கீழ் இருந்த போதும் அம்மக்கள் தத்தம் தனித்துவங்களை பேணும் வகையிலான வன்னிமைகள் என்றழைக்கப்ட்ட சுயராச்சிய பிரிவுகளை பேணியே வந்திருக்கிறார்கள் என்பது குறிப்பாக நோக்கற்பாலது.
காலணித்துவத்தின் வருகை
இலங்கையில் காலணித்துவ ஆட்சி ஏற்பட்டபோது மூன்றுவகை அரசுகள் காணப்பட்டிருந்தன. கோட்டை ராட்சியம்இ கண்டி ராட்சியம்இ யாழ்ப்பாண ராட்சியம் எனும் அரசுகளே அவையாகும். 1505 இல் முதன் முதலாக இலங்கையில் காலடி வைத்தவர்கள் போர்த்துக்கேயராகும். இவர்கள் 1597 இல் கோட்டை ராட்சியத்தை தமது முழுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அதன் பின்னர் 1619 இல் யாழ்பபாண ராட்சியத்தையும் போர்த்கேயர் தோற்கடித்து கைப்பற்றினர். இந்த வேளைகளில் கொட்டியாரம் என்றழைக்கப்பட்ட திருகோணமலைஇ மட்டக்களப்புஇ பழுகாகமம்இ பாணமை போன்ற நால்வகை வன்னிமைகள் கண்டிராட்சியத்துடன் இணைந்தே இருந்தன. இறுதியாக 1815 இல் ஆங்கிலேயேர் கண்டிராட்சியத்தை வீழ்த்தும் வரை தமது சுதந்திரத்தை விட்டுக்கொடுக்காமல் கண்டி ராட்சியத்தின் பிரசைகள் கடுமையாகப் போராடி வந்தனர்.
1818 ல் ஆங்கிலேயருக்கு எதிராக கண்டியில் ஏற்பட்ட கிளர்ச்சியானது ஆங்கிலேயர் தமது ஆட்சியமைப்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தை அவர்களுக்கு உணர்த்தியது. கண்டி பிரசைகளின் தேசிய உணர்வானது ஆங்கிலேயருக்கு அச்சமூட்டியது. எனவேதான் எதிர்கால பாதுகாப்பினை உறுதிபடுத்தி கொள்வதற்காக கண்டி ராச்சியத்தை கூறு போடும் முயற்சியில் ஆங்கிலேயர் இறங்கினர். 1832 இல் கோல்புறுக் – கமறோன் குழுவினரின் ஆலோசனையின் பெயரில் இலங்கை 5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மாகாணங்கள் எனும் புதிய நிர்வாக அலகு உருவாக்கப்பட்டது. இதன்படி கண்டிராச்சியத்தின் தூரப்பகுதிகளான (திசாவைகள்) அனுராதபுரத்தின் வடக்கேயிருந்த சில பகுதிகள் மற்றும் மன்னார்இ காளிதேசம் என்று அழைக்கப்பட்டு நீண்டதொரு வரலாற்று காலத்தில் தனியரசாய் திகழ்ந்த முல்லைத்தீவு போன்றவற்றை யாழ்ப்பாண இராச்சியத்துடன் இணைத்து வடமாகாணமாகவும்இ கண்டிராச்சியத்தின் தீகவாவி அடங்கிய மட்டக்களப்பு திருகோணமலை பகுதிகளை ஒருங்கிணைத்து கிழக்கு மாகாணமாகவும் புதிய அலகுகள் உருவாக்கப்பட்டன(9).
ஆட்சி அதிகார ரீதியாக மட்டும் அல்ல கிழக்கு மாகாண மக்கள் தமக்கான சமூகவியல் அம்சங்களிலும் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அங்கு வாழும் மக்களில் இருந்தும் அதிகளவில் வேறுபட்டே நிற்கிறார்கள் என்பதுவும் மிகமுக்கியமானதொன்றாகும்.
கிழக்கு மாகாண மக்கள் தமது கலைஇ கலாசாரம்இ பண்பாடுஇ சடங்கு சம்பிரதாயங்கள்இ மற்றும் உணவு முறைகளிலும் கூட தமக்கான தனித்துவமான பழக்கவழக்கங்களை கொண்டிருக்கிறார்கள். இவைகளில் பெரும்பாலானவை ஆரியகலப்பற்றவையாகவும் தாய்வழி உரிமைகளை பேணுபவையாகவும்இ மற்றும் சாதிவாரியாக தீண்டாமை இறுக்கமற்றவையாகவும் காணப்படுகின்றது. இப்பண்புகள் ஒரு சமூகவியல் பார்வையில் முற்போக்கு அம்சங்கள் நிறைந்தனவாகும். இந்த அம்சங்களடங்கிய சமூக ஒழுங்குகளையும் அவைசார்ந்த பண்பாட்டு கூறுகளையும் பேணிபாதுகாப்பதற்காக கிழக்குமாகாணம் தனக்கான தேசவழமைகளை காலா காலமாக கைக்கொண்டு வந்திருக்கின்றது. அந்தவகையில் 1876 ல் ஊ.டீசுஐவுழு என்பவரால் கிழக்கில் நிலவிய இந்த தேசவழமைகள் ஒரு நூலாக தொகுக்கப்பட்டு ‘முக்குவர் சட்டம்’ எனும் அந்தஸ்தை பெற்றது(10).
யாழ்ப்பாண மக்களிடையே காணப்பட்ட இத்தகைய தேசவழமைகள் எப்படி 1707 இல் தொகுக்கப்பட்டு யாழ்ப்பாண தேசவழமை சட்டம் எனும்(11) சட்ட அந்தஸ்தை பெற்றனவோ அதேபோன்று கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் அல்லாத தமிழர்களுக்குரியனவாக இந்த முக்குவர் சட்டமும் ஆங்கிலேயரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பேசுகின்ற மொழியில் தமிழர்களாகவே இருந்தபோதும் கிழக்கும் வடக்கும் ஒரே விதமான சட்டத்திட்டங்களால் கட்டுப்படுத்தப்பட முடியாதவையாக உள்ளன என்பதை இங்கு கூடியுள்ள யாவருக்கும் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன். இதே போன்றே கிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்கும் அவர்களது மத நம்பிக்கையின் அடிப்படையிலமைந்த இஸ்லாமிய சரியா சட்டகோவை இலங்கையில் காலணித்துவ ஆட்சியாளர்களினாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை நம் எல்லோரது கவனத்திலும் கொள்ளப்பட வேண்டியதொன்றாகும்.



4:57 PM
Jana Master
0 கருத்துரைகள்:
Post a Comment